யுத்தம்




இறைச்சியை விரும்பிச் சாப்பிடும் மக்கள் வாழ்ந்த அந்நாட்டில்.

 திடீரென சாப்பிடுவதற்கு இறைச்சியே கிடைக்காமல் போக,
அந்நாட்டு மக்கள் இறைச்சி எங்காவது கிடைக்காதா.. என ஏங்க ஆரம்பித்த போது.

அந்நாட்டில் ஒருவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதாவது இறைச்சிக்காக எங்கோ அலைவதைக் காட்டிலும் நம் உடம்பிலிருந்து ஏதாவது இறைச்சியை அறுத்து எடுக்க முடியாமா என யோசித்து, தன் பின்பக்கம் இடுப்புக்குக் கீழ் நல்ல சதைப் பகுதியாக இருந்த இடத்தில் கொஞ்சம் சதையை கிழித்து அதை வறுத்து சாப்பிட்டுப் பார்த்தான். அது சுவையாகவும் மனதுக்கு திருப்தியாகவும் இருந்ததால்,

 தினசரி கொஞ்சம் இடுப்புக்குக் கிழே உள்ள பகுதியை ஒரு தேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்போல ரத்தம் அதிகம் வராமல் சதையை அறுத்து அவன் வறுத்து சாப்பிட்டு வந்தான். அவன் சாப்பிட்டு வந்தது அந்த நாட்டு தலைவருக்குத் தெரிந்துவிட்டது.

 அவர் இவனிடம் நீ மட்டும் எப்படி தினமும் இறைச்சி சாப்பிடுகிறாய் எனக் கேட்க.

நான் இன்ன இன்னமாதிரி இறைச்சியை வெட்டி சாப்பிடுகிறேன் எனச் சொல்ல.

 ஓ! அப்படியா சரி எனக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு பொதுமேடையில் இறைச்சி வெட்டி எடுக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தாள். எல்லாருக்குமே இறைச்சி கிடைக்குமே எனத் தலைவர் சொல்ல.

தலைவர் சொல்லுக்கு மறுப்பே கிடையாது என்று ஒரு பொதுமேடையில் தன் நாட்டு மக்கள் முன்னிலையில், ரத்தம் வராமல் பின்பக்க இடுப்புக்குக் கீழ் இறைச்சியை எப்படி எடுப்பது என அவன் செய்துகாட்டியதும்.

 மக்களும் தன் சதையை அறுத்து தானே உன்னும் பழக்கத்துக்கு ஆளாகி எல்லோருக்கும் பின்பக்க சதை போய்.

 பிறகு உடலில் வேறு என்னென்ன உறுப்பு இருக்கோ அத்தனையும் அறுத்து சாப்பிட ஆரம்பித்து கடைசியாக உதடுகளைக் கூட அறுத்து சமைத்து சாப்பிட்டார்கள் என்ற 
லத்தீன் அமெரிக்க சிறுகதையை, விசிக ரவிக்குமார் அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் என ஒரு நிகழ்வில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்‌.

(இந்த சிறுகதை நமக்கு சொல்லவருவது.)

இந்தக் கதையைப் போலத்தான் யுத்தமும்‌,

யுத்தம் என்பது மனிதன் மனிதனையே தின்னக்கூடியது. 

இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வந்தால் யாருக்கு பலம் அதிகம், யாருக்கு நவீன ஆயுதம் இருக்கு என்று கணக்கு போடும் மாமேதை கூட்டங்களுக்கு யுத்தத்தால் ஏற்படும் மனித இழப்பைப் பற்றியெல்லாம் தெரியாது.

நம் நாட்டில் யுத்தம் நடக்காதபோதே மதத்தின் பெயரால் மாட்டிறைச்சியின் பெயரால் மனிதன் மனிதனைத் தின்னும் தேசமாகத் திகழ்கிறது. இதில் நமக்கு யுத்தத்தின் பேராபத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நமக்கு அண்டை நாடான இலங்கையில் நடந்த உள்நாட்டு சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான யுத்தத்தில் பெரும்பான்மை மக்களான சிங்களவர்கள் சிங்கள ராணுவத்தை முழுமையாக ஆதரித்தார்கள், யுத்தத்தின் போது, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை கொண்டாடினார்கள், ஆனால் போர் முடிந்து இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, சிங்கள அரசு வெற்றி பெற்றதா. ஆனால் இன்று அந்நாடு மீள முடியாத கடனில் தத்தளிக்கிறது, அந்நாட்டின் பெரும்பகுதி வருவாய் கடனை அடைக்கவே விரயமாகிறது.

உள்நாட்டு யுத்தத்தின் போது நாயகனாக இருந்த ராஜபக்சேவின் வீட்டை அந்நாட்டு மக்களே எரித்தார்கள், வெற்றி அடையாளமாகத் தெரிந்த ராஜபக்சே இலங்கையின் வீழ்ச்சிக்கு அடையாளமாக மாறினார்.

யுத்தம் என்பது மனிதர்களை மட்டும் அழிக்காது. மனித் தன்மையையே அழித்துவிடும்.

Post a Comment

أحدث أقدم